
வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ்
ஓடிடி உரிமையைப் பெற்றிருந்த பி4யு என்ற நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் படத்திற்கான தடையை வாங்கியது. படத்தின் சம்பள பாக்கிக்காக நாயகன் விக்ரமிடம் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்ததற்குத்தான் வழக்கு என்றார்கள்.
அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை காரணமாக படம் காலை காட்சியில் வெளியாகாமல் மதியத்திற்கு மேல் தான் வெளியானது. தனக்குக் கொடுக்கப்பட்ட உரிமையை விக்ரம் திருப்பிக் கொடுத்துவிட்டதால் படம் வெளியானது. தன் சம்பள பாக்கியைப் பற்றிக் கவலைப்படாமல் விக்ரம் திருப்பிக் கொடுத்ததை படத்தை வாங்கியவர்களும், திரையுலகினரும் பாராட்டினார்கள்.
தற்போது ஓடிடி உரிமை சிக்கல்கள் பேசித் தீர்த்து அதன் வியாபாரத்தை முடித்துள்ளார்கள். அமேசான் பிரைமில் இப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த சிக்கல்கள் தீர்ந்துள்ளதால் "வீர தீர சூரன்" முதல் பாகம் பற்றிய அறிவிப்பு வெளிவருமா என விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!