
கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா
இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து ஹன்சிகா அவரது தாயார் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவும், முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் அளித்துள்ள மனுவில், தனது சகோதரரின் மனைவி முஸ்கான் நான்சி வேண்டுமென்றே தன் மீது பழி சுமத்தி புகார் அளித்துள்ளார் என்றும் தனது சகோதரர் பிரசாந்த் மற்றும் முஸ்கான் திருமணத்திற்காக 27 லட்சம் ரூபாய் கடன் வாங்கி நான் செலவு செய்தேன். அந்த பணத்தை முஸ்கானிடம் திருப்பி கேட்டதற்காக, தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி என் பெயரையும் என் தாயார் பெயரையும் இந்த வழக்கில் இழுத்து விட்டுள்ளார். என் சகோதரருக்கும் முஸ்கான் நான்சிக்கும் நடந்த குடும்ப வாழ்க்கை சச்சரவுகளில் எனக்கு துளியும் தொடர்பு இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் ஹன்சிகா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!