
பிளாஷ்பேக் : முதல் சிங்களப் படத்தை தயாரித்த தமிழர்
இலங்கை மக்கள் தங்கள் சொந்த மொழியில் ஒரு படத்தை காண வேண்டும் என்று விரும்பிய அவர் இந்த படத்தை தயாரித்தார். இலங்கை விடுதலைப் போராட்டத் தலைவரும் இலங்கையின் முதல் பிரதமருமான டி.எஸ்.சேன நாயகா படத்தை தொடங்கி வைத்தார். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. இந்த படம் நான்கு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 175 நாட்கள் வரை ஓடியது.
சிங்கள மக்கள் தங்களது முதல் படத்தை கொண்டாடினாலும் பத்திரிகைகளும் விமர்சகர்களும் படத்தை ஏற்கவில்லை. தென்னிந்திய சினிமா மேலும் ஒரு மொழியில் படத்தை இயக்கி இருக்கிறது. படம் சிங்கள மொழி பேசினாலும் அது எதிரொலிப்பது தமிழ் கலாச்சாரத்தை என்று விமர்சித்தன. படத்தில் சிங்கள நடிகர்களுடன் ருக்மணி தேவி என்ற தமிழ் நடிகை ஹீரோயினாக நடித்தார். ஜோதி சின்கா இயக்கினார் .
இந்தப் படத்தை தயாரித்தது பற்றி பின்னாளில் நாயகம் குறிப்பிடும் போது “ஒரு தமிழர் ஏன் சிங்களப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். அதற்கான காரணத்தை நீங்கள் அறிய விரும்பலாம். எனது பதில் மிகவும் எளிமையானது. எனது சிங்கள நண்பர்களில் பலர் தமிழ் மற்றும் இந்தி படங்களை ரசிப்பதை நான் கவனித்தேன். அவர்கள் ஏன் அந்தப் படங்களை விரும்புகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அதற்கான காரணத்தை அறிய, என் நண்பர்கள் தங்கள் சொந்த மொழியில் படங்கள் இல்லாதது குறித்து வருத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். உள்ளூர் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திறமைகளைப் பயன்படுத்தி ஒரு சிங்களப் படத்தை உருவாக்க இதுவே என்னைத் தூண்டியது.” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!