
இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ரஜினியை திடீரென சந்தித்து பேசினார்கள். அவர்களுடன் நெல்சனும் இருந்துள்ளார். தற்போது நடித்து வரும் படம், அடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்து இவர்கள் இணைந்து பேசியதாக கூறப்படுகிறது.
உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது கடைசி படத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறார் என்றும், அந்தபடம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும், அதில் கமல்ஹாசனும் நடிக்க ரஜினி விரும்புவதாகவும், அதற்கேற்ப ஒரு கதையை லோகேஷ், நெல்சன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து உருவாக்க வேண்டும் என்று ரஜினி விரும்புவதாகவும், அதனால் இந்த சந்திப்பு நடந்தாகவும் கூறப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!