
தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுசுயா சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஜெயிலர் படத்தில் வரும் "காவாலா" பாடலுக்கு கவர்ச்சியாக ஆடை அணிந்து நடனம் ஆடினார். அப்போது இளம் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். சிலர், "ஆன்ட்டி" ஆன்ட்டி" என அனுசுயாவை பார்த்து சத்தம் போட்டனர்.
இதனால் நடனம் ஆடுவதை நிறுத்திவிட்டு மேடையின் விழிம்புக்கு வந்த அனுசுயா அங்கிருந்த மைக்கில் ""நீங்கள் என்னை சீண்டினால், நான் என்ன செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், மேடைக்கு வாங்க பார்க்கலாம்" என்று தெலுங்கில் கத்தினார்.
இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நடனம் ஆட மறுத்த அனுசுயா பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டதால், மீண்டும் நடனமாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 39 வயதாகும் அனுசுயாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!