
கல்பனா தற்கொலை முயற்சியா? : மகள் விளக்கம்
சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகத் தகவல் வெளியானது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று தற்போது முன்னேறி வருவதாகத் தகவல்.
கல்பனாவின் மகள் தயா பிரசாத் தனது அம்மா உடல்நிலை குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். “எனது அம்மாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். அவர் எல்எல்பி மற்றும் பிஎச்டி படித்து வருகிறார். அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது. அதனால், அதற்காக மருந்துகளை உட்கொள்வார். அப்படி சாப்பிடும் போது கொஞ்சம் அதிகமாகிவிட்டது. இது தற்கொலை முயற்சியல்ல. யாரும் இதை வேறுவிதமாக மாற்றிப் பேச வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில், வழக்கமாக 8 மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுவேன். இருந்தாலும் தூக்கமே வரவில்லை. எனவே மேலும் 10 மாத்திரைகளை சாப்பிட்டேன். அதன்பின் என்ன நடந்ததென்று தெரியவில்லை என கல்பனா தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!