
சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த விஜய் : லிங்குசாமி தகவல்
சண்டக்கோழி கதை தயாரானதும் விஜயிடம் சென்று கதை சொன்னேன் பாதி கதை கேட்டவர் மீதி கவிதை கேட்க மறுத்தார். காரணம் மீதி கதையில்தான் ராஜ்கிரன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ராஜ்கிரண் படத்துக்குள் வந்த பிறகு எனக்கு என்ன வேலை இருக்கிறது என்று விஜய் கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன் அவரும் நடிக்க மறுத்து விட்டார். அதன் பிறகு தான் விஷாலை நடிக்க வைத்தேன்.
சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரு முறை விஜய் சந்தித்தேன். அப்போது அவரிடம் படத்தின் இரண்டாம் பகுதி கதையின் கேட்கவே இல்லையே என்றேன். "அந்தப் பையன்(விஷால்) இந்த துறைக்கு வர வேண்டும் என்று இருக்கிறது. அவருக்கு பொருத்தமான கதை இது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். விஷால் பிரபாஸ் இடத்திற்கு வந்திருக்க வேண்டியது. எங்கோ மிஸ் ஆகி இருக்கிறது ஆனாலும் விரைவில் அவர் அந்த இடத்திற்கு வருவார்.
இவ்வாறு லிங்குசாமி கூறியிருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!