
திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா
பாட்டிக்கும் பேத்தியும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தி உருவான முதல் படம் என்று கூட இதை சொல்லலாம். தனது முதல் படத்திலேயே மோகன்லால் மற்றும் பத்மினி போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற நதியா இந்த பிப்ரவரி மாதத்தில் தனது 40 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார்.
இந்த படம் தான் பின்னர் தமிழில் 1985ல் பூவே பூச்சூடவா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இடையில் சில வருடங்கள் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்த நதியா தற்போது மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் தயக்கமின்றி நடிக்க துவங்கியுள்ளார். குறிப்பாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் தாமிரபரணி ஆகிய படங்கள் அவரது ரீ என்ட்ரிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!