
பிளாஷ்பேக் : புஷ்பலதா, ஏவி.எம்.ராஜன் கிறிஸ்தவ போதகர்கள் ஆனது எப்படி?
"நானும் ஒரு பெண்" படத்தில் ஏவி.எம்.ராஜனுடன் இணைந்து நடித்தபோது இருவரும் காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார்கள். பிறப்பால் கிறிஸ்தவரான புஷ்பலதா கிறிஸ்தவ பெண்ணாகவே வாழ்ந்தார். ஏவிஎம்.ராஜன் இந்துவாக வாழ்ந்தார்.
இந்த நிலையில் இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்தார்கள். இதனால் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார்கள். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்தது. மகள் மகாலட்சுமியை நடிகையாக்க விரும்பினார். அந்த கனவும் நடக்கவில்லை. இப்படி வாழ்க்கையில் தோல்வி, பொருளாதார சிக்கல் என பிரச்னைகளை சந்தித்தனர். இந்தச்சூழலில் தனது கணவரையும், மகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார் புஷ்பலதா.
பின்னர் கணவன், மனைவி இருவரும் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு கிறிஸ்தவ மதபோதகர் ஆனார்கள். இருவருமே புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்கள் என்பதால் இவர்கள் பிரசங்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் திரண்டனர். உலக நாடுகள் முழுவதும் சுற்றினார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தார்கள். நடிகை புஷ்பலதா வயதுமூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் நேற்று இரவு சென்னையில் காலமானார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!