
கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும்
கேரளாவையும் தாண்டி பல பிரபலங்கள் இறந்து போன மாணவனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்த நிகழ்வு குறித்து தங்களது கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “இந்த 2025ல் இன்னொரு இளம் உயிரை நாம் இழந்துள்ளோம். சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆணவம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதுபோன்று மனரீதியாக, உணர்வு ரீதியாக, சில சமயம் உடல் ரீதியான இது போன்ற துன்புறுத்தல்களும் கொடுமைப்படுத்தலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதை வெறும் இரங்கல்களுடன் கடந்து செல்ல கூடாது. நிச்சயம் நடவடிக்கை தேவை. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் அடி ஆழத்திலிருந்து விசாரிப்பார்கள் என நம்புகிறேன். மிஹிர் முகமதுக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!