
அமரனை போலவே பராசக்தி படமும் பயோபிக் கதை தான்
இந்த பராசக்தி படம் 1965களில் நடந்த கதைக் களத்தில் உருவாகிறது. அதாவது 1965ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது மற்றும் மதுரையில் ஹிந்தி மொழிக்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது தடியடி நடத்திய அரசை கண்டித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தி உள்ளார்கள். அந்த பேரணியின்போது மாணவர்கள் மீது காவல் காவல்துறையினர் தடியடி நடத்தியபோது, ராசேந்திரன் என்ற மாணவரின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரழந்துள்ளார்.
இந்த மொழிப் போரில் உயிரிழந்த ராசேந்திரனுக்கு 1969ம் ஆண்டில் அவரது தியாகத்தை நினைவூட்டும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலை திறந்து வைத்துள்ளார். மொழிப்போர் தியாகியான இந்த மாணவர் ராசேந்திரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தான் தற்போது சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் உருவாகிறது.
இதில், ராசேந்திரன் என்ற வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த வகையில் அமரன் படத்தை போலவே இந்த படமும் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!