
சோதனைக்கு கைபையை தர மறுத்தார் : லட்சுமி மஞ்சு மீது விமான நிறுவனம் குற்றச்சாட்டு
இது குறித்து விமான நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் “நடிகை தனது பையை விமான நிலைய ஊழியர்கள் பிடுங்கிக் கொண்டதாக சொல்கிறார். அவர்கள் சோதனைக்காகவே வாங்கினார்கள். அவர் அதை திறக்க அனுமதிக்கவில்லை. தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லாமல் இருக்க கடுமையான சோதனைகள் செய்யப்படுவது வழக்கமானதுதான். அதற்காகவே நடிகையின் பையை ஊழியர்கள் தடுத்தனர்” என்று குறிப்பிட்டிருந்தது.
அதன்பிறகு சோதனை முடிக்கப்பட்ட தனது பொருட்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லட்சுமி மஞ்சு, “எனது வழக்கை முடித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!