
ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி
அதேசமயம் கடந்த வருடம் ஜனவரி மாதம் தனது காதலரும், சின்னத்திரை நடிகருமான கேரளாவைச் சேர்ந்த பிரேம் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுவாசிகா. அப்போது அவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. தற்போது திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவுற்ற நிலையில் நேற்று இந்து தமிழ் முறைப்படி மீண்டும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேசமயம் இது உறவினர்கள், நண்பர்கள் என அழைத்து மிகப்பெரிய அளவில் நடைபெறாமல் இந்து முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்திற்காக, அதை நினைவாக வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஷூட்டிங் போல இந்த திருமணத்தை நடத்தியுள்ளனர். “ஷூட்டிங் என்றாலும் கூட நிஜமாகவே திருமணம் செய்தது போன்ற உணர்வு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது” என சுவாசிகாவின் கணவர் பிரேம் ஜேக்கப் கூறியுள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!