
பிளாஷ்பேக் : திடீரென காணாமல் போன நடிகை
இந்த படத்தை மித்ரா தாஸ் இயக்கினார். எட்டயபுரம் இளவரசர் காசி விஸ்வநாத பாண்டியன் எழுதிய கதைக்கு குப்புசாமி கவி திரைக்கதை வசனம் எழுதினார். மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார்.
மன்னன் அற்புத வர்மனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் தயாளன்(பி.யு.சின்னப்பா). இரண்டாவது மனைவியின் மகன் பரதன்(டி.ஆர்.மகாலிங்கம்). இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்த நேரத்தில் அமைச்சர் ஒருவன் மன்னனுக்கு துரோகம் செய்து தானே மன்னராவதோடு, தயாளனையும் சிறையில் அடைக்கிறான். சிறையில் இருந்து தப்பும் தயாளனும், அவருடன் பரதனும் இணைந்து எப்படி இழந்த ராஜ்யத்தை மீட்கிறார்கள் என்பதுதான் கதை.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ஹீரோக்களை விட தயாளன் காதலியாக நடித்த கே.வி.ஜெயகவுரியை பற்றித்தான் அன்றைக்கு ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள். அவ்வளவு அழகாக இருந்திருக்கிறார் கவுரி. படத்தில் 3 பாடல்களை பாடி இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவரைப் பற்றிய வேறு தகவல்களும் இல்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!