
கே.ஜி.எப் 2 வெற்றியால் அலட்சியம் - பிரசாந்த் நீல்
டிச 23, 2024
Advertisement
கன்னட சினிமாவில் வெளிவந்த "கே.ஜி.எப் 1 மற்றும் 2" படங்களை இயக்கியது மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதன் பிறகு பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை, அதேசமயம் வசூல் 650 கோடியை கடந்தது.
சலார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் பிரசாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில் சலார் படத்தில் உள்ள சில குறைகள் குறித்து பேசியதாவது, "சலார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. கே.ஜி.எப் படத்தின் மிகப்பெரிய வெற்றியினால் சலார் படத்தின் உருவாக்கத்தில் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேன் எனவும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தினால் சலார் 2ம் பாகம் எனது சிறந்த படமாக வரவேண்டும் என்பதற்காக திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
சலார் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில் பிரசாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில் சலார் படத்தில் உள்ள சில குறைகள் குறித்து பேசியதாவது, "சலார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. கே.ஜி.எப் படத்தின் மிகப்பெரிய வெற்றியினால் சலார் படத்தின் உருவாக்கத்தில் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேன் எனவும் தோன்றியது. அதில் கற்ற பாடத்தினால் சலார் 2ம் பாகம் எனது சிறந்த படமாக வரவேண்டும் என்பதற்காக திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!