
ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ்
டிச 02, 2024
Advertisement
ராஞ்சனா, அட்ரங்கி ரே ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் "தெரே இஸ்க் மெயின்" என்கிற ஹிந்தி படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேசமயம், ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே ‛இட்லி கடை" என்ற மற்றொரு படத்தை இயக்கி, நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கனமழை காரணமாக ஒரு வாரம் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார் தனுஷ்.
இதற்கிடையே "தெரே இஸ்க் மெயின்" திரைக்கதை விவாதம் பணிகள் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனருடன் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.
அதேசமயம், ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் வெளியாகும் முன்பே ‛இட்லி கடை" என்ற மற்றொரு படத்தை இயக்கி, நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கனமழை காரணமாக ஒரு வாரம் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுள்ளார் தனுஷ்.
இதற்கிடையே "தெரே இஸ்க் மெயின்" திரைக்கதை விவாதம் பணிகள் டில்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனருடன் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!