
லோகேஷ் கனகராஜ் அந்த விஷயத்தில் தலையிடுவதில்லை : சிலாகிக்கும் நாகார்ஜுனா
அதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் என்றால் நடிகர் நாகார்ஜூனா தான். தமிழில் ரட்சகன், பயணம், தோழா என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது ஆரம்பகால படங்களான உதயம், இதயத்தை திருடாதே படங்கள் எல்லாமே தமிழ் ரசிகர்களின் இதயத்தை திருடியவை தான். அந்த வகையில் தோழா படத்திற்கு பிறகு முற்றிலும் புதிய ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் நாகர்ஜுனா.
இந்த படத்தில் லோகேஷ் கனகராஜூடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட நாகார்ஜுனா கூறும்போது, “லோகேஷ் கனகராஜ் உடன் வேலை பார்ப்பதில் நான் ரொம்பவே உற்சாகமடைகிறேன். அவர் திரைக்கதை உள்ளிட்ட மற்ற அனைத்திலுமே தான் அடுத்த தலைமுறை இயக்குனர் என்பதை நிரூபித்து வருகிறார். அவரது கதாபாத்திரங்களை நடிப்பது ரொம்பவே புதுமையாக இருக்கிறது. அதற்கான சுதந்திரத்தையும் அவர் கொடுக்கிறார். அங்கே எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. ஒரு ஹீரோவிடமும் சரி, வில்லன்களிடமும் சரி நீங்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என ஒரு போதும் அவர் சொல்வதில்லை" என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!