
தம்பிக்கு கை கொடுத்தவர்கள் அண்ணனை கவிழ்த்தது ஏன் ? வைராலகும் மீம்ஸ்
அதாவது இயக்குனர் சிவா தமிழில் சிறுத்தை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதில் கார்த்தி கதாநாயகனாக நடித்து, படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்திக்கு மிகப்பெரிய கமர்சியல் அந்தஸ்தையும் தேடிக் கொடுத்தது. அதேபோல அதற்கு முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். வணிக ரீதியாக படம் போகவில்லை என்றாலும் கார்த்தி வளர்ந்து வந்த கட்டத்தில் அவரது இரண்டாவது படமாக உருவாகி அவரது நடிப்புப் பாதையை விசாலப்படுத்தி கொடுத்ததுடன் இப்போது வரை ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வரும் அளவிற்கு மதிப்புக் குறையாமல் இருக்கிறது. ஆனால் அதே செல்வராகவன் தான் சூர்யாவுக்கு என்ஜிகே என்கிற ஒரு தோல்வி படத்தை கொடுத்தார்.
அதேபோல இயக்குனர் லிங்குசாமி பையா என்கிற படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார். அதுவரை முரட்டுத்தனமாக இருந்த கார்த்திக்கு சாக்லேட் பாய் என பெயர் பெற்று தந்ததுடன் அவரை ஆக்சன் ஹீரோவாகவும் அந்த படம் மாற்றி காட்டியது. ஆனால் அதீத தன்னம்பிக்கையுடன் இயக்குனர் லிங்குசாமி சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் அவர்கள் இருவரின் வாழ்க்கையையுமே புரட்டிப் போட்டது.
இந்த வரிசையில் கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் என்கிற வெற்றி படத்தை கொடுத்தார் இயக்குனர் பாண்டிராஜ். அதே நம்பிக்கையில் தான் அவருக்கு எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் சூர்யா. ஆனால் சூர்யாவின் நம்பிக்கை பொய்த்து போனது. இப்படி தம்பிக்கு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் அண்ணனுடன் இணைந்து பணியாற்றும் போது சொதப்பி விட்டார்களே என ஒரு மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!