
4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம்
சமீபத்தில் விமானப்பயணம் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்த ஸ்ருதிஹாசன் விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆகியும் விமானம் வரவில்லை. இது குறித்து முறையான தகவலும் பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து அங்கிருந்தபடியே தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த பிரச்சனை குறித்து வெளிப்படுத்திய ஸ்ருதிஹாசன் குறைந்தபட்சம் என்ன நடக்கிறது என்பதை பயணிகளுக்கு முறையாக அறிவிக்கக்கூடவா முடியவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்தை விமர்சித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளிக்கும் விதமாக பதிவிட்டுள்ள இண்டிகோ விமான நிறுவனம், உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்திற்காக வருந்துகிறோம். காலநிலை சரியில்லாத காரணத்தினால் மும்பையில் இருந்து புறப்பட்டு வந்து சேர வேண்டிய விமானத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!