
சின்மயி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்ற சமந்தா
அங்கே நடைபெற்று வரும் நவராத்திரி பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ள சமந்தா, சின்மயியின் குழந்தையை தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அப்பா அம்மாவுக்கு டாட்டா சொல்லச் சொல்லி சொல்வது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. சின்மயியும் சமந்தாவும் பல வருடங்களாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் தங்களது சொந்த வாழ்க்கையிலும் திரை உலகத்திலும் பல பிரச்னைகளை எதிர்கொண்ட போது ஒருக்கொருவர் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து நட்பை பேணி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!