
அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல்
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜென்சன், சுருதி மற்றும் சுருதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஒரு ஆம்னி வாகனத்தில் பயணித்த போது எதிர்பாராமல் ஒரு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டிய ஜென்சன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து கேரளாவில் உள்ள மக்கள் பலரும் ஜென்சனுக்கு தங்களது இரங்கலையும் சுருதிக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி இந்த துயர நிகழ்வு குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டு சுருதிக்கு ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “ஜென்சனின் மறைவு மிகப்பெரிய சோகத்தை கொண்டு வந்துள்ளது. சுருதியின் வலி என்பது கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாதது. சுருதி மற்றும் ஜென்சனின் அன்பான குடும்பத்தினர் அனைவரும் இந்த துயரத்தில் இருந்து விரைவில் மீண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!