
பிளாஷ்பேக் : நெருடலான கதையை நேர்த்தியாய் சொல்லி, நெஞ்சம் நிறையச் செய்த சாரதா
முதல் படமே முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட, முட்கள் நிறைந்த பாதையில் பயணிப்பதைப் போன்ற ஒரு அனுபவத்தை தரும் படமாக அமைந்தது. “அம்பிகாபதி”, “திருடாதே”, “மணியோசை” போன்ற படங்களைத் தயாரித்த “ஏஎல்எஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஏஎல் சீனிவாசன் தயாரித்தார். இந்த திரைப்படத்தின் கதையை, அவர் அவரது நண்பர்களிடம் சொல்லியபோது, இது வேண்டாத விஷப்பரீட்சை என நண்பர்கள் சொல்ல, கதையை எழுதிய கேஎஸ் கோபாலகிருஷ்ணனையே இந்தப் படத்தை இயக்கச் சொல்லவும் இருக்கின்றேன் என ஏஎல் சீனிவாசன் ஆணித்தரமாக கூற, பைத்தியக்காரத்தனமான முடிவு என நண்பர்கள் கூறினர்.
துணிந்து அந்தக் கதையை படமாக எடுத்த ஏஎல் சீனிவாசன், படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தில், அதுவரை எடுத்திருந்த படத்தை போட்டுப் பார்த்தபோது, இந்தப் படத்திற்காக முன் பணம் கொடுத்திருந்த விநியோகஸ்தர்கள், இந்தப் படம் சம்மந்தமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி, கொடுத்த முன் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். இந்தநிலையில், படம் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, அதிகப்படியான வசூலை வாரிக் குவித்து, மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது ஏஎல் சீனிவாசனுக்கு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தான் குத்தகைக்கு எடுத்திருந்த "மெஜஸ்டிக் ஸ்டூடியோ”வின் பெரையே “சாரதா ஸ்டூடியோ” என பெயர் மாற்றமும் செய்தார் ஏஎல் சீனிவாசன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!