
பிளாஷ்பேக் : வெளியீட்டுக்குப் பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம்.
1934ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே.சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இருவருக்குமே இது முதல் படமாகும். எஸ்.எஸ்.மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார்.
படத்தில் 55 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருந்தது. நாயகனும் நாயகியும் சந்திக்கும் போதெல்லாம் பாடல்களாலேயே பேசிக் கொண்டனர்.
அன்றைய ரசிகர்கள் பாடலை ரசித்தாலும் அது கதையோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கருதினார்கள். இதனால் படம் வெளியான சில நாட்களிலேயே படத்திற்கான வரவேற்பு குறைய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே சுப்பிரமணியம், பத்து பாடல்கள் வரை குறைத்து, கதைக்கும் வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் வெளியிட்டார். அதன் பிறகு படம் பல வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!