
செக்ஸ் அடிமையாக வைத்த தமிழ் இயக்குனர் : நடிகை சவுமியா குற்றச்சாட்டு
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : ‛‛எனக்கு அப்போது 18 வயது. தமிழ் இயக்குனர் ஒருவர் அவரது மனைவியுடன் வந்து என் அப்பாவிடம் பேசி சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து சென்றார். படத்தில் நடிக்கும் போது அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். ஒருநாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத சமயம் தன்னை மகள் போன்று நினைப்பதாக கூறி முத்தமிட்டார். அப்போதே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. என்னுடன் குழந்தை பெற்றக் கொள்ள வேண்டும் என கூறினார். பின்னர் அவரால் நான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். ஓராண்டு காலம் அந்த இயக்குனரின் செக்ஸ் அடிமையாக இருந்தேன். பயத்தால் இதை அப்போது என்னால் கூற முடியவில்லை. இந்த அவமான உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு 30 ஆண்டுகள் ஆனது"" என தெரிவித்தார். ஆனால் அந்த இயக்குனரின் பெயரை கூறவில்லை. போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!