
ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் பல நரிகள் உள்ளன : ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட அடுத்த பதிவு
இந்த நிலையில் அவர் எக்ஸ் பக்கத்தில் இன்னொரு பதிவு போட்டுள்ளார். அதில், ஒவ்வொரு பெண்களின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட பெண்கள் அதிகமான உழைப்பை கொடுத்தாலும் விருந்துகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகெலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள். ஆண் எப்போதுமே ஒரு ஆண். அவன் மட்டுமே சரியானவன் என்று துரதிஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரிக்கிறார்கள். என்ன பரிதாபமான உலகம் இது என்று தெரிவித்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!