
சினிமா ஆன ஒரு பக்க கதை
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் பேசியதாவது: இது என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். 10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் எழுதிய ஒரு பக்க கதையை நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அதுதான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம். பல கஷ்டங்களை கடந்து தான் இந்த படத்தை முடித்திருக்கிறோம்.
திகில் படம் என்பது ஒரே ஃபார்மெட்டில் தான் இருக்கும். நாங்கள் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். படம் நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஒலிவடிவமைப்பு, ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். இரண்டு மணி நேரம் புதிய உலகத்திற்கு படம் அழைத்து செல்லும். என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!