சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னை நினைத்து 2ம் பாகம் வரப்போகிறதா? - விக்ரமன் பதில்
Advertisement
Advertisement
சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னை நினைத்து 2ம் பாகம் வரப்போகிறதா? - விக்ரமன் பதில்
ஜூலை 20, 2024
அ நிறம் | அளவு
Advertisement
தமிழில் ஏற்கனவே வெளியான பல சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் விக்ரமன் இயக்கி சூப்பர் ஹிட்டான சூர்ய வம்சம், வானத்தைப் போல, உன்னை நினைத்து போன்ற படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகுமா? என்று ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் இயக்கிய சூர்ய வம்சம், வானத்தைப் போல என்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை. குறிப்பாக, வானத்தைப் போல படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் அளவுக்கு இப்போதைக்கு நடிகர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த முயற்சிகளை கைவிட்டு விட்டேன். சூர்யா நடிப்பில் இயக்கிய உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டேன். ஆனால் பாதிக்கு மேல் அந்த ஸ்கிரிப்ட் வரவில்லை என்பதால் அந்த முயற்சியையும் கைவிட்டு விட்டேன். அதனால் நான் இயக்கிய எந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கப் போவதில்லை என்கிறார் விக்ரமன்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!