
அறிவாளிகள் தேவையில்லை, ஆடியன்ஸ் போதும் - பாபி சிம்ஹா
படத்தை "பார்ட் பார்ட்" ஆக பிரித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். இப்படி விமர்சிப்பதில் ஒரு உள்நோக்கம் உள்ளது என்றும் சிலர் கூறுகிறார்கள். இத்தனை விதமான விமர்சனங்களுக்கும் படக்குழுவிலிருந்து யாரும் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.
இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ளது "இந்தியன் 2". இருந்தாலும் படம் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவுகின்றன.
படத்தில் இந்தியன் தாத்தாவைக் கைது செய்யத் துடிக்கும் சிபிஐ அதிகாரியாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்திற்கு வரும் விமர்சனங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “எல்லாருமே ரொம்ப அறிவாளியா நினைச்சிட்டிருக்காங்க. ஒரு விஷயம் நல்லாருக்குன்னு சொன்னா நம்மளை முட்டாளா நினைச்சுக்குவாங்களோன்னு ஏதோ ஒண்ணு பேசிட்டிருக்காங்க. அந்த அறிவாளிங்களைப் பத்தி நாம கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை ஆடியன்ஸ், அவங்களுக்குப் புடிச்சிச்சா, நமக்கு அவங்கதான் தேவை, அறிவாளிங்க தேவையில்லை, அறிவை வச்சிக்கிட்டு அவங்க இருக்கட்டும்,” என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!