லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார்
Advertisement
Advertisement
லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார்
ஜூன் 24, 2024
அ நிறம் | அளவு
Advertisement
லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல ஜவுளிக் கடை அதிபர் அருள் சரவணன். அதையடுத்து தனக்கு பொருத்தமான கதை தேடலில் ஈடுபட்டிருந்த அவர், பல இயக்குனர்களிடத்தில் கதை கேட்டு வந்தார். இந்த நிலையில், துரை செந்தில்குமார் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் இயக்கத்தில் அடுத்து நடிக்க போகிறார். அதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் துரை செந்தில் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் லெஜண்ட் சரவணன். அதோடு படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ், கருடன் உள்ளிட்ட பல படங்களை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!