
தொழிலதிபரான இசையமைப்பாளர் அனிருத்
ஜூன் 13, 2024
Advertisement
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது தமிழில் வேட்டையன், இந்தியன் 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், நயன்தாரா - விக்னேஷ் சிவன் நடத்தி வரும் டிவைன் புட்ஸ் என்ற நிறுவனத்தில் சமீபத்தில் முதலீடு செய்தார். அதையடுத்து தற்போது வி.எஸ்.மணி அண்ட் கோ என்ற பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்திருக்கிறார். அதோடு, இந்த நிறுவனத்தில் அவர் அம்பாசிடராகவும் உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா என்ற இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் இந்த பில்டர் காபி நிறுவனத்தில் அனிருத் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!