
ஐஸ்வர்யா அர்ஜூனை கரம் பிடித்தார் உமாபதி ராமையா
திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமணம் தொடர்பான சடங்குகள் நடந்தன. இந்நிலையில் இன்று(ஜூன் 10) காலை சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதி - ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது. இதில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறவுகள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்கள் விஷால், செந்தில் உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமண வரவேற்பு ஜூன் 14ல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!