
இமயமலையிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி : மோடி, ஸ்டாலின், சந்திரபாபுவிற்கு வாழ்த்து
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் : ‛‛தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக எனது அருமை நண்பர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள். அதேப்போல் எனது நண்பர் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். மத்தியில் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக உள்ளார். அவருக்கும் எனது வாழ்த்துகள். இமயமலை பயணம் சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம் கிடைக்கிறது"" என்றார் ரஜினி.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!