
அஞ்சலி - பாலகிருஷ்ணா சர்ச்சை நிகழ்வு : நெட்டிசன்கள் சொல்லும் இரண்டு கோணங்கள்
அது உண்மைதான் என்பது மெய்ப்பிப்பது போல அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் தரப்பில் ஆரம்பத்தில் நடிகை நேஹா ஷெட்டியின் பக்கத்தில் சென்று பாலகிருஷ்ணா அமர்ந்தபோது நடிகை அஞ்சலி அவரை தானாகவே அழைத்து தன் பக்கத்தில் அமரச் செய்தார். நீண்ட நேரம் ஜாலியாக சிரித்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதன்பின் மேடை ஏறிய போது தான் பாலகிருஷ்ணா மீண்டும் கலாட்டா செய்யும் விதமாக அஞ்சலியை தள்ளிய நிகழ்வு ஏற்பட்டது என்றும், பாலகிருஷ்ணா இதை அவர் வேண்டுமென்றே செய்யவில்லை என்பது அஞ்சலிக்கும் நன்றாகவே தெரியும். அதனால் தான் அவர் அந்த அளவிற்கு சிரித்தார் என்றும் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர்.
அதேசமயம் இன்னும் சில நெட்டிசன்களோ பாலகிருஷ்ணா அந்த நிகழ்வில் மது அருந்திவிட்டு கலந்து கொண்டதால் தான் அப்படி நடந்துகொண்டார் என்றும் கூறுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக பாலகிருஷ்ணாவின் காலடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலின் அருகிலேயே இன்னொரு சிறிய தண்ணீர் பாட்டில் இருந்ததையும் அதில் மதுபானம் போன்ற கலரில் சிறிதளவு திரவம் இருந்ததையும் படம்பிடித்து காட்டியுள்ளனர். அதனால் அவர் நிகழ்ச்சியின் போதே மது அருந்தியிருக்கலாம் என்றும் கூட பலர் தங்களது இன்னொரு கோணத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!