
இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா?
இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே நாட்களில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. ஆனால் அந்த செய்தியை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூன் 7-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க தவறானது என்று தெரிவித்திருக்கிறார் . அதோடு ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெற்ற அன்றைய தினம் மட்டுமே குட் பேட் அக்லி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அதற்கு அடுத்த நாளிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!