
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு ஆச்சரியங்கள்
இரண்டாவது இயக்குனர் விக்ரமன், விஜய் இடையிலான மோதல். விக்ரமன் இயக்கிய ‛உன்னை நினைத்து" என்ற படத்தில் விஜய் நடித்த போது மரத்தின் மீது ஏறி நடிக்க சொன்ன ஒரு காட்சிக்காக அவருடன் சண்டை போட்டு அந்தப் படத்திலிருந்தே விலகினார் விஜய். அதன்பின் அப்படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடித்தார். "பூவே உனக்காக" படத்தின் மூலம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையைக் கொடுத்த விக்ரமன், விஜய் ஆகியோர் "உன்னை நினைத்து" பட மோதலுக்குப் பிறகு இணைந்து படம் பண்ணவேயில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டி ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது இந்த விழாவை முன்னின்று நடத்திய தயாரிப்பாளர் தாணுவை பாராட்டினார். தங்களின் பகையை மறந்து டி ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர்.
அடுத்தது இயக்குனர் விக்ரமன் அவரது மகன் விஜய் கனிஷ்கா, மற்றும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோருடன் விஜய்யை நேரில் சந்தித்தார். விஜய் கனிஷ்காவை வாழ்த்திய விஜய் இயக்குனர் விக்ரமனையும் கட்டித் தழுவினார்.
இந்த இரண்டு சந்திப்புகளும் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!