
குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி
அதாவது குஷ்பு நடிகையாக இருந்தபோது இயக்குனர் சுந்தர் சியும் அவரும் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். “நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த சமயத்தில் குஷ்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார். இது குறித்து என்னிடம் புலம்பிய குஷ்பு நீங்கள் வேறு யாராவது நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூட கூறினார். அதன்பின்னர் நாங்கள் இருவருமே நமக்கு திருமணம் ஆனால் குழந்தை பிறக்காது, நமக்கு நாம்தான் குழந்தை என மனதளவில் தயாராகி விட்டோம். ஆனால் திருமணமானபின் ஆண்டவனின் எண்ணம் வேறாக இருந்தது. ஒன்றுக்கு இரண்டாக அழகான பெண் குழந்தைகள் பிறந்தன” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!