
17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி
விஜய்க்கும், கீர்த்தனாவுக்கும் "நாளைய தீர்ப்பு" தான் முதல் படம். அதன்பிறகு கீர்த்தனா சூரியன் சந்திரன், பிரபி பிரமாணம், பவித்ரா, தாய் தங்கை பாசம், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் குணசித்ர வேடத்தில் நடித்தார். சின்னத்திரை தொடர்களில் நடித்தார். தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறர். கீர்த்தனா கடைசியாக 2007ம் ஆண்டு "இப்படிக்கு என் காதல்" படத்தில் நடித்தார். தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரதாப் கூறும்போது “தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான பேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!