
சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது
துபாய், ஈரானியன் கிளப்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடுவராகப் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை குட்டி பத்மினி பங்கேற்றார். சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை உண்டாக்கியதற்காக இக்குறும்படத்தை உருவாக்கிய துபாயில் வசிக்கும் தமிழக மாணவர்களாகிய அனன்யா மணிகண்டன் மற்றும் ஷியாம் மணிகண்டனை பாராட்டினார்.
மேலும் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன், ‛‛இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN STG) நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் குறிக்கோளின் 13வது இலக்கு ஆகும். அதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு சென்றடைய வேண்டும்"" என கூறி இந்த குறும்படத்தையும், மாணவர்களது முயற்சியையும் பாராட்டினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!