
அடுத்த தலைமுறைக்கும் சென்ற ராகவா லாரன்ஸின் கல்வி சேவை
இந்த நிலையில் தற்போது 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படிக்க வந்த குழந்தைகளில் ஒருவன் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கிறான். தற்போது அவர் என்னை தேடி வந்து, தன்னால் முடிந்த அளவுக்கு குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி என்னுடைய சேவை அடுத்த தலைமுறைக்கு சென்றிருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குழந்தையை படிக்க வைத்தால் மட்டும் போதாது. அந்த குழந்தை படித்து நல்ல நிலைக்கு வந்த பிறகு மற்ற குழந்தைகளையும் படிக்க வைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.
சேவை என்பதுதான் உண்மையான கடவுளாகும். அந்த சேவையை தற்போது அடுத்த தலைமுறையினர் தொடர முன் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சமூகத்தை இதன் மூலம் நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்று கருதுகிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!