
8 மாதங்களுக்கு பிறகு ஜப்பானில் வெளியாகிறது ஓப்பன் ஹெய்மர்
கிறிஸ்டோபர் நோலன் படங்களிலேயே குறைவான வசூலை கொடுத்த படமும், அதிக விமர்சனத்தை சந்தித்த படமும் இதுதான். என்றாலும் விருதுகளை குவித்து மறுகவனம் பெற்று வசூலில் சாதனை படைத்தது. இப்படம் இந்த ஆண்டு 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை குவித்தது.
இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டாலும் ஜப்பானில் இதுவரை வெளியாகாமல் இருந்தது. காரணம் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அழியவும், 2 லட்சம் மக்கள் பலியாகவும் காரணமாக இருந்த ஓப்பன் ஹெய்மர் படத்தை ஜப்பான் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் படம் அங்கு வெளியாகவில்லை.
என்றாலும் படத்தின் கதைப்படி அணுகுண்டை கண்டுபிடித்ததுதான் ஓப்பன் ஹெய்மரே தவிர அவருக்கு தெரியாமலேய ஜப்பான் மீது குண்டை வீசியது அமெரிக்க அரசாகும். இதற்காக ஓப்பன் ஹெய்மர் மிகவும் வருந்தினார் என்பதுதான் கதை. இதை ஜப்பான் மக்களுக்கு புரிய வைத்த பிறகு இந்த படம் அங்கு வெளியாகிறது. அதற்கு ஏற்றார்போல் அது தொடர்பான காட்சிகள் அதிகரிக்கப்பட்டு, போஸ்டர் டிசைன்கள் மாற்றப்பட்டு வருகிற 29ம் தேதி படம் ஜப்பானில் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!