
ராஜாவின் பயோபிக்கை இயக்க ரத்தம் தெறித்த படங்களின் இயக்குனர்
சினிமாவில் பல்வேறு கலைஞர்களின் பயோபிக், அதாவது வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இன்னும் உருவாக்காமல் இருக்கிறார்கள். இளையராஜாவின் பயோபிக் படம் வருவது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அவரது இசையை ரசிக்கும் அனைவருக்குமே விருப்பமான ஒன்றுதான்.
ஆனால், அதையும் தாண்டி இன்றைய சினிமா ரசிகர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இளையராஜாவின் பயோபிக் படமான "இளையராஜா" படத்தை இயக்கப் போவது அருண் மாதேஸ்வரன். பொங்கலுக்கு வெளியான "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குனர். இந்தப் படம் மற்றும், இதற்கு முன்பு அவர் இயக்கிய "சாணி காயிதம், ராக்கி" ஆகிய படங்களை இயக்கியவர்.
அருண் இயக்கிய மூன்று படங்களுமே ரத்தம் தெறிக்கத் தெறிக்க எடுக்கப்பட்ட வன்முறைப் படங்கள். அப்படிப்பட்ட படங்களை இயக்கியவர் இசையால் நம்மை எப்போதும் தாலாட்ட வைக்கும் இளையராஜாவின் பயோபிக்கை எப்படி எடுப்பார் என்ற விமர்சனங்களையும் முன் வைக்கிறார்கள்.
இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து யாரும் விமர்சிக்கவில்லை. அதே சமயம், அருண் மாதேஸ்வரன் இயக்குவது குறித்துதான் பல்வேறு கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்குமளவிற்கு அருண் மாதேஸ்வரன் இந்த "இளையராஜா" படத்தைக் கொடுக்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!