
அஜித்திற்கு என்ன பிரச்னை : வெளியான தகவல்
மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்லவிருந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலைப்பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக மூளையில் ஏதோ பிரச்னை என்றும் ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அஜித் தரப்பு இதனை மறுத்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்படி அஜித்தின் காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன பல்ஜ் எனப்படும் புடைப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு ஏதுவும் இல்லையாம். நேற்றே அந்த பல்ஜ் அரை மணிநேரத்தில் நீக்கப்பட்டு நேற்றிரவே சாதாரண வார்டுக்கு அஜித் வந்துவிட்டாராம். இந்த மைனர் ஆபரேஷனால் அவரின் எந்த பணியும் பாதிப்படையாது என்பது தான் உண்மை. இன்று இரவோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டப்படி ‛விடாமுயற்சி" படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் அடுத்தவாரமே அஜர்பைஜான் கிளம்ப உள்ளாராம்.
அஜித் நலம்பெற இபிஎஸ் வாழ்த்து
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‛‛மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர், நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்"" என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!