
தமிழ் திரைத்துறையினருக்கு ஜாக்பாட் : பூந்தமல்லியில் ரூ.500 கோடி செலவில் பிரமாண்ட திரைப்பட நகரம்
இந்நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு இதை தாக்கல் செய்தார். அதில் சினிமா துறையினருக்கு ஜாக்பாட்டாக தமிழ்த் திரைத் துறையினரின் நீண்டநாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன திரைப்பட நகரத்தில் விஎப்எக்ஸ், அனிமேஷன், புரொடக்ஷன் பணிகள் பிரிவு உள்ளிட்ட சகல வசதிகளும் இடம் பெற போகின்றன.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!