
வடிவேலு நல்ல நடிகர், ஆனால் நல்ல மனிதர் இல்லை : சொல்கிறார் நடிகர் பெஞ்சமின்
இந்த நிலையில், வடிவேலுவுடன் சில படங்களில் நடித்துள்ள காமெடியன் பெஞ்சமின் கூறுகையில், ‛‛போண்டா மணி, நான் உள்ளிட்ட பல நடிகர்கள் மக்களின் கவனத்திற்கு வந்தது வடிவேலுவால்தான். காரணம் உண்மையிலேயே அவர் ஒரு பிறவிக் கலைஞன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனபோதிலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. குறிப்பாக படப்பிடிப்பு தளங்களில் நாங்கள் எல்லாம் சாப்பாடு கிடைக்காமல் திண்டாடினால் கூட அது குறித்து வடிவேலு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டார். நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு ரோட்டில் நின்றால் கூட அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் ஜாலியாக கேரவனில் அமர்ந்திருப்பார். அதேசமயம், கேப்டன் விஜயகாந்த் போன்ற நடிகர்கள் சக நடிகர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். விஜயகாந்த்தை பொருத்தவரை தனது யூனிட்டில் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்க்கக் கூடியவர். யார் மனதும் நோகும்படி நடந்து கொள்ள மாட்டார் என்று பெஞ்சமின் கூறி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!