
காஷ்மீர் பின்னணியில் யாத்திசை இயக்குனரின் அடுத்த படம்
இயக்குனர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த படத்தை காஷ்மீர் பின்னணியில் படமாக்க உள்ளார். இது குறித்து, “யாத்திசையை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலையாக இடம் பார்க்க ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநருடன் காஷ்மீர் வந்துள்ளேன். மிக பிரம்மாண்ட கதை களமாக இந்த படம் அமையும். மற்ற விவரங்கள் முதன்மை நடிகர்கள் மற்ற நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு,வெளியீடு குறித்து விரைவில் எழுதுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!