
தெலுங்கு பிக் பாஸ் 7 வின்னர் கைது
பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர் என்பவரையும், தெலங்கானா, சித்திபேட் மாவட்டம் கொல்கூர் என்ற அவர்களது சொந்த ஊரில் ஐதராபாத், ஜுபிளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இறுதிப் போட்டி முடிந்து வெளியில் வந்த போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி பல்லவியும், அவரது ரசிகர்களும் வெற்றி ஊர்வலம் நடத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு டிவி நிகழ்ச்சியின் வின்னர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!