
ஜெயப்பிரதா தண்டனை நிறுத்தி வைப்பு
இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதான வழக்கை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து விட்டது.
இதை எதிர்த்து ஜெயப்பிரதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் விசாரணை நடத்தியது. பின்னர், சிறை தண்டனைக்காக ஜெயப்பிரதா சரணடைய வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளித்தும், தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டது. அதோடு இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!