
மகளுக்கு அசத்தலான வாழ்த்து சொல்லிய ஐஸ்வர்யா ராய்
நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2011ம் ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயானார். அந்தப் பெண் குழந்தை ஆராத்யாவுக்கு இன்று பிறந்த நாள். தனது அன்புமகளின் பிறந்த நாளை முன்னிட்டு பல விதமான எமோஜிக்களுடன் அன்பான, அசத்தலான வாழ்த்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
“எனது அன்பான தேவதை ஆராத்யா, நான் உன்னை எல்லையில்லாமல், நிபந்தனையில்லாமல், என்றென்றும் நேசிக்கிறேன். எனது வாழ்க்கையின் கட்டுக்கடங்காத அன்பு நீ. உனக்காக நான் சுவாசிக்கிறேன், என் அன்பே. ஹேப்பி ஹேப்பி ஹேப்பியஸ்ட் 12வது பிறந்தநாள். உன்னை கடவுள் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும். நீயாக இருப்பதற்கு நன்றி, மதிப்பில்லாத அன்பு. உன்னை அதிகமாய் நேசிக்கிறேன், நீதான் மிகச் சிறந்தவள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது குட்டி இளவரசி... உன்னை மிக அதிகமாய் நேசிக்கிறேன்,” என அப்பா அபிஷேக் பச்சன் மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!