
பண மோசடி புகார் : நடிகை நமீதா கணவருக்கு சம்மன்
நான் முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்ற அவர், பதவியை பெற்றுத் தரவில்லை. கேட்டபோது நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் 4 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு அவருக்கு பதவியை கொடுத்து விட்டதாக கூறினார். என் பணத்தை திரும்ப கேட்டபோது, 9 லட்சத்தை கொடுத்துவிட்டு, மீதி, 41 லட்சத்தை, ஒரு மாதத்தில் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். பணத்தை பெற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து நடிகை நமீதா, அவரது கணவர் சவுத்ரி, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம், சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். முத்துராமன், துஷ்யந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் மத்திய அரசின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதும், மோசடி செய்த பணத்தில் சொத்து வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுபற்றி மேலும் விசாரிக்க, நமீதாவின் கணவர் சவுத்ரி, பா.ஜ., நிர்வாகி மஞ்சுநாத் ஆகியோருக்கு சேலம் மாநகர போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!