
கல்லூரி மாணவர்களுக்கான அரசியல் பேசும் ஜிவி பிரகாஷின் ரெபல்
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல்பார்வையை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். அதில் ஜிவி பிரகாஷ் கையில் பெட்ரோல் குண்டை எறிவது போன்றும், பின்னணியில் கலவரக் காட்சிகளாகவும் உள்ளது.
படம் பற்றி இயக்குநர் கூறுகையில், ""1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் இதில் பேசப்பட்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் திரையுலக பயணத்தில் இந்தப்படம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும்,"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!